தினமலர்
Sign Up

Advertisement

Dinamalar Logo
Districts

வெள்ளி, மார்ச் 29, 2024,பங்குனி 16, சோபகிருது வருடம்


Advertisement

 போலி போதை பொருள் விற்ற கும்பல் கைது 

 போலி போதை பொருள் விற்ற கும்பல் கைது 


UPDATED : மார் 04, 2022 10:34 PM

ADDED : மார் 04, 2022 10:34 PM

ShareTweetShareShare

UPDATED : மார் 04, 2022 10:34 PM ADDED : மார் 04, 2022 10:34 PM


சென்னை,:போலி போதை பொருளை வாங்க மறுத்தவரை கத்தியால் வெட்டிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.மதுரையைச் சேர்ந்தவர் முகமது ஷபீன் அப்துல்லா,26. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்தவர் அருண்குமார்,31. இருவரும் நண்பர்கள். இவர்களுடன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துராஜா,40; தமீன் அன்சாரி, 27 ஆகியோரும், போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.இவர்கள், வெள்ளை நிறத்தில் உள்ள யூரியாவை பவுடராக்கி, 'ஹெராயின்' போதை பொருள் என, கத்தார் நாட்டில் உள்ள, ஒருவருக்கு கடத்த முயன்றனர். அத்துடன், சென்னை பெரியமேடு, மூர்மார்க்கெட் பகுதியில் நின்ற, சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஜமாலுதீன்,41 என்பவருக்கும் விற்க முயன்றனர்.யூரியா பவுடர் என தெரிந்து வாங்க மறுத்த ஜமாலுதீனை, கத்தியால் வெட்டிவிட்டு நான்கு பேரும் தப்பினர். நான்கு பேரையும் பிடித்த கீழ்ப்பாக்கம் துணை கமிஷனரின் தனிப்படை போலீசார், அவர்களை பெரியமேடு காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். இவர்களிடம் இருந்து, 1 கிலோ யூரியா மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Topics :
சம்பவம்

Advertisement

Advertisement

Advertisement

வாசகர்கள் கருத்துகள்



முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ...


முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய ...


Advertisement


Follow us

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us